மயிலாடுதுறை, ஜூலை 15 - மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோயில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி கொள்முதல் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடு துறை, சீர்காழி, குத்தாலம் மற்றும் செம்ப னார்கோவில் ஆகிய இடங்களில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக துறை சார்பாக 4 ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் இயங்கி வருகிறது. இதில் தற்சமயம் விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள பருத்தி பயிரில் இருந்து பஞ்சு சேகரம் செய்து மறைமுக ஏலம் மூலம் விற்பனை செய்து வருகின்ற னர்.
இதுவரை மயிலாடுதுறை யில் 3833 குவிண்டால், குத்தா லத்தில் 9352 குவிண்டால், சீர்காழியில் 7920 குவிண்டால், செம்பனார்கோவிலில் 10567 குவிண்டால் என மொத்தம் 31,673 குவிண்டால் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 21.76 கோடி ஆகும். சுமார் 5000 விவசாயிகள் பய னடைந்துள்ளனர்.
மேலும் ஆண்டுதோறும் சராசரியாக 12 ஆயிரம் மெ.டன்கள் கொள்முதல் செய் யப்படும் சூழ்நிலையில், நடப்பாண்டில் இது வரை 3167 மெ.டன்கள் வரப்பட்டுள்ளது. சுமார் 8000 மெ.டன்கள் வரும் வாரங்களில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படு கிறது” என்றார்.